Saturday, October 12, 2013

அவன் பற்றிய நினைவுகள். . .


Share/Bookmark


10 55
22 09 2013


கை காலசைத்து
கண் விழிக்கும் பொழுதுகளிலும்

தடுமாறும் வேளைகளிலும்
தனிமையின் வெளிகளிலும்

அன்பு மிகைத்த ஓர்
அரவணைப்பிலும்
அடர்த்தியான ஒரு முத்தத்திலும்

அந்திப் பொழுதை
அடைகையிலும்
அது கழிகையிலும்

இருண்ட அறைகளிலும்
இரவின் மடிகளிலும்

இடைக்கிடை கண்விழிக்கும்
இன்பக் கனவிடையும்

எப்படித் தவிர்ந்தாலும்
எப்படியும் நடந்து விடும்
எல்லாத் தவறுகளின் போதும்

கவிதையொன்றைக்
கற்பனை செய்யும் போதும்

மின்சாரம் தடைப்பட்டு
மின் விளக்கணையும் போதும்
மீண்டும் அது வந்து
மின் விசிறி அசையும் போதும்

மழையில் நனைகையில்
மறைந்து ஒழிகையில்
மரத்தடி நிழல்களில்
மாபெரும் வெயில் வெளியில்

எப்படியெல்லாமோ
எழுந்துவிடவே செய்கிறது
அவன் பற்றிய நினைவுகள்
அல்லாஹூ அக்பர்

............

அவனை மறந்தவனாக

.............................

அடுத்த நொடிக்குள்
எனது கால்களை
எப்படி நகர்த்துவேன்
என் நுரையீரலை
எப்படி மீண்டும் நிரப்புவேன்