யானை பிடித்து வந்து
யாழ் தேவியில் ஏற்றி
கோட்டையில் விற்று
கொடி கொட்டிய வனிகத்தை
பெருங்காட்டில் செய்து
பெருமை கண்ட பூமி
ஆளுக்காள் வயல் வெட்டி
ஆளாக்கு நெல் விதைத்து
அருவடையில் பங்கு வைத்து
அனுபவித்த பொன் பூமி
கடை வைத்துக்
காலம் கடத்தி
கட்டுக் குளத்தில்
கால் கழுவிக்
கடமை செய்து
தொண்மைக் குடிகளாய்
தொழில் செய்த பூமி
பொன்னர் வந்து
போங்கடா என்ற போது
வாயடைத்துத் திரும்பிய
வாழ வைத்த பூமி
இன்றோடு முடியும் என்று
இருக்கும் வரை நம்பி
இறந்து போன
என் பாட்டனார்
ஏர் பிடித்த பூமி
இழந்தோமே - தவிர
இழிந்தோமில்லை
ஈமானால் உயர்ந்தோம்
இனிதே மீண்டோம்
பாதகம் நடந்து
பல வருடம்
பறந்து போச்சு
இந்த ஒக்டோபரோடு
இனத்துவேசம் செய்த
ஈழப் பேடிகளின்
இழிவுச் செயலுக்கு
இருபத்தைந்து வயசாச்சு..
10112015