Sunday, October 4, 2015

இந்த ஒக்டோபரோடு இருபத்தைந்து வயசாச்சு..


Share/Bookmark
யானை பிடித்து வந்து
யாழ் தேவியில் ஏற்றி
கோட்டையில் விற்று
கொடி கொட்டிய வனிகத்தை
பெருங்காட்டில் செய்து
பெருமை கண்ட பூமி

ஆளுக்காள் வயல் வெட்டி
ஆளாக்கு நெல் விதைத்து
அருவடையில் பங்கு வைத்து
அனுபவித்த பொன் பூமி

கடை வைத்துக்
காலம் கடத்தி

கட்டுக் குளத்தில்
கால் கழுவிக்
கடமை செய்து

தொண்மைக் குடிகளாய்
தொழில் செய்த பூமி

பொன்னர் வந்து
போங்கடா என்ற போது
வாயடைத்துத் திரும்பிய
வாழ வைத்த பூமி

இன்றோடு முடியும் என்று
இருக்கும் வரை நம்பி
இறந்து போன
என் பாட்டனார்
ஏர் பிடித்த பூமி

இழந்தோமே - தவிர
இழிந்தோமில்லை

ஈமானால் உயர்ந்தோம்
இனிதே மீண்டோம்

பாதகம் நடந்து
பல வருடம்
பறந்து போச்சு

இந்த ஒக்டோபரோடு
இனத்துவேசம் செய்த
ஈழப் பேடிகளின்
இழிவுச் செயலுக்கு
இருபத்தைந்து வயசாச்சு..
10112015

No comments:

Post a Comment