Thursday, February 7, 2013

ச(சு)கவாழ்வு


Share/Bookmark

தூயவன் திருப் பெயரைத்
துதித்தோம்பித் துவங்குகிறேன்

ஐக்கியம் அவன் செயல்

.............................
அவன் தூதைச் சுமந்தவர்
அவரைத் தொடர்ந்தோர்
அனைவர் மீதிலும்
அகில சாந்தியும்
தூய சமாதானமும்
தொடர்ந்து நிலவட்டும்

அவை தொல்பொருளாகிவிடக்கூடாது

...........................
ஐக்கியம்,சக வாழ்வு
சாந்தி நெறியின் சத்தியத் தூது

.......................
ஒரு விரல் அசைப்பதில்
ஆயிரம் கோளாறு
இரு கரம் ஏந்தினால்
எத்தனை கோளாறு

மூன்று நாள் விருந்து வைத்தால்
முப்பது கோளாறு
நாற்பதாம் நாள் வந்தால்
நாலாயிரம் கோளாறு

............................
கோளாரு மட்டுமே கண்டோம்
பல நூறு திசையில் சென்றோம்
கண்ணீரும் செந்நீருமே
கடைசியில் கண்டோம்

காணும் பிறையிலும்
கலவரம் கொண்டோம்

கத்தும் பாங்கிலும்
பத்தாய்ப் பிறிந்து
பகலிலும் நொந்தோம்

எனதென்றும்  உனதென்றும்
எத்தனை சொன்னோம்
எட்டய்ப் பிறிந்து
எழில் கெட்டு நின்றோம்

எட்டாக் கனிக்குக்
கொட்டாவி விட்டே
ஏமந்து போனோம்

இவன் பொய்யன்
அவன் பொய்யன்
என்று தினம் சொன்னோம்

பலகோடிப் பொய்யர் கூடிப்
பலன் என்ன கண்டோம்
பச்சோந்தி வாழ்க்கையிலே
பரிதாபமே எச்சம்

ஒன்றும் ஒன்றும்
இரண்டென்றாய்
இருபதென்றால் உனக்கென்ன‌

பதினொன்று என்பார்
பலகோடி என்றும் சொல்வார்
பைத்தியம் நீயேன்
பத்தாகப் பிரிந்தாய்

மண்ணிலே பிறந்து விட்டேன்
என்பதற்காய்
மண்ணூர்க் கவிஞன்
மனம் வருந்திப்பாடுகிறேன்

மடமைகளை என்னி,
மாற்று வழி தேடிக் களைத்து விட்டேன்

..............................
தினம் திட்டித் தீர்த்தது போதும்
தலை வெட்டிக்கொய்தது போதும்

தன் தந்தையின் மகனைத்
தானே தூற்றித் திரிந்தது போதும்
தாய் நாட்டை நாலாய்ப்
பிழ்ந்து கேட்பது போதும்

பொய் சாட்சிகள் சொன்னது போதும்
புறம் பேசிக்களைத்தது போதும்- தினம்
நாயாய்ச் செத்தது போதும்
நயவஞ்சகம் ஒழியட்டும் போதும்

..................
நல்லதோர் நாடு செய்வோம்- அதில்
நாயன் இறைவனை நன்றே தொழுவோம்
நாயகம் மொழியை நயமாய்ச் சொல்வோம்
நம்மை நாமே ஆண்டு மகிழ்வோம்

..................................
எரி ம‌லையாய் எல்லாம்எழுவோம்
வேற்றுமைச் சறுகைத் தினம் சுடுவோம்
ஒற்றுமைச்சுடர் வீசிப் பயில்வோம்

..............................
பேரணி நம் அணி - அதை
ஓரணி செய் வோம்
காரணியின்றியே
கரை தொட்டு மகிழ்வோம்

......................
உணர்ந்ததைத்தான்
நானுரைத்தேன்
உணரவேண்டுமென்பதற்காய்

கண்டும் காணாதவராய்
கவலையற்று வாழ்வோரே
கேளீர்..................

..........................
களாமிறங்கிக் களையகற்ற
களமேறிக் கொடியேற்ற‌
கவிபாடி வார்ரீர்

.............................
இல்லை

கற்பனைதான் வாழ்க்கை என்று
கடற்கரையில் கோட்டை கட்டி
கண்ணீரில் சாவீர்.............

என் கவிதைகளின்
சாட்சியத்தில்
நரகப் படுகுழியில்
வீழ்வீர்................

13102012


ஜாமீஆ நளீமிய்யாவில் ''சகவாழ்வு" எனும் தலைப்பில் 
இடம்பெற்ற மூன்று நாள் கல்வி முகாமில்
மேடயேற்றிய கவிதை 

தீவாய் ஆனாயே . . . .


Share/Bookmark



எத்தனை நாள் அழுதாயோ
ஈழத் திருநாடே
எனது அருந்தாயே
தீவாய் ஆனாயே

ஆரியர் வரும்போதும்
தீவாய் இருந்தாயே
யாரிழைத்த குற்றமடி
அன்றே அழுதுவிட்டாய்

வறுமையின் வாசலில் நான்


Share/Bookmark


என்னைவிடப் பெருவள்ளல்
பாரில் இல்லையென்பேன்

குடியிருக்க என் வீட்டை
வறுமைக்கே கொடுத்துவிட்டேன்
வாசலில் ஒதுங்கிக் கொண்டேன்

வறுமை என் வீட்டினுள் வாழுது
வறுமையின் வாசலில் நான்

வயதான தந்தையோடு
வறுமையும் படுத்துக் கொண்டது
வளம் குறைந்த தந்தைக்கு
வைத்தியச் செலவு கையிலில்லை

வடுப்பிடித்த கண்களை
வறுமை மூடிக் கொண்டதால்
வயதான தாயும்கூட
வளம் குறைந்து கிடக்கிறாள்

மூன்றே மாதத்தில் புது மனிதன்
வீட்டினுள் நுழைந்திடுவான்
மனைவிக்கு ஏழு மாதம்
வறுமை வந்து ஈரேழு வருடம்

குப்பி விளக்கில் என் பணம்
கொஞ்சமாய் எரியுதென்று இரவில்
விளக்கையும் அணைத்திடுவேன்
வறுமைக்கு அஞ்சி

வறுமைக்கு என்ன பிரியம்
என் வீட்டின்மீது
வந்து பலவருடமாச்சு - இருந்தும்
போக மறுக்குது பாவி

வறுமைக்கு என் வீடு
வசதியாய் இருந்திருக்கும்
வீட்டுக்குள் இருக்குது

வீட்டைவிட வாசலில் சுகம்
காற்று அதிகம் - ஆகவே நான்
வறுமையின் வாசலில்

வறுமை என் வீட்டுக்குள் வாழுது
வறுமையின் வாசலில் நான்




சிறு கற்பனையில் முளைத்த கவிதை ................
ச‌ட்டக் கல்லூரி கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை..............

2009-08-01

முஸ்லிம் தேசத்து முகவரி


Share/Bookmark



ஈழ முஸ்லிம் பெருந்தலைவ!
மனித குலப் பெருமேதை
மறைந்த மாமனித!
மர்ஹூம் அஷ்ரபுக்கு . . . . .

ஆண்டவன் அடியன்
அன்பனின் அஞ்சல் . . . . .

மர்ம ராத்திரியின்
மங்கிய இருளில்
உன் உதடுகள்
உச்சரித்திருந்தாலும் . . . .

அந்தக் கலிமாவை
அவன் மட்டுமே அறிவான் . . . . .

அந்த நாளின் அடையாளமாய் . . . . .

ஒரு தசாப்தம் முடிந்து
ஒற்றை வருடம் கழியும்போது
அர்த்தமுள்ள ராத்திரியில்
என் பேனையின் நினைவுகள்

எங்கள் தேசிய தொலைக் காட்சி
கப்றரை வரை காட்சி தர
நிச்சயமாய் வாப்பில்லை . . .

இறைவன் நாடவில்லையேல்
நீ அறிய வாய்ப்பில்லை. . . . . .

எங்கள் வளமும்
பூர்வீக நிலமும்
மீண்டும் பெற்றோம். . . ****

குரல் கொடுத்தும்
விரல் நீட்டியும்
ஆரம்பித்தவன் நீயன்றோ . . . . .

எத்தனை தலைமைகள்
எத்தனை சொன்னாலும்
முஸ்லிம் தலைமையை
முதலில் உணர்ந்த
மூத்தவன் நீயன்றோ . . . .. . .

ஊருக்கு ஒரு கட்சி
உன் பெயர் சொல்லியல்லவா
ஊர்வலம் போகிறார்கள்

சோதர!
உண்மையைச் சொல்
உந்தன் கட்சி எது? ? ?

நீ நட்ட ஆலமரத்தில்
பழுத்து விழுந்த ஆலம் விதைகள்
தனித்தனியே மரமாகி
பழமின்றி நிழலுமின்றி
பட்டமரமானதோடு . . . . . . .

நீ நட்ட முதல் மரமும்
மூச்சுத் திணறுவதறிவாயா? ? ?

முன்பெல்லாம்
பெரு விலங்குகள் நிழல் பெற்ற
எங்கள் மரங்களில்
சிறு கொடிகள் படர்வதால்
எங்கள் நிழல்களும்
மறுக்கப்பட்டிருக்கிறது . . . . .

தற்காலிகமோ நிரந்தரமோ
நீயறிவாயா சோதர ? ? ?

தலைவா!
நீ விட்டுச் சென்ற கடமைகள்
தொட்டுச் செல்லப்படவில்லை . . . .
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. . . .

உன்னுடைய பெயர் மட்டும்
உறுப்பமைய அச்சடித்து
உச்சரித்து மொழியப்பட்டு . . . .

தேர்தல் காலங்களில்
பருவகால ஏளத்தில் . . .
பக்குவமாய்ப் பயணிக்கிறது. . . . . .

****வடகிழக்கு முஸ்லிம்களின் சொந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வ‌ழங்கப்பட்டது. ......யுத்தத்தின் பின்

16-09-2000 மாம் ஆண்டு மரணித்த தலைவர்அஷ்ரப் நினைவாக 16-09-2011 ஆம் திகதி என் பேனை எழுதியவை.

பஞ்சாய்ப் பறந்த
அவர் உடலுக்கு
இது சமர்ப்பணம். . . . .
   2011-09-10

றமழான் இம்முறையும் வருகிறது


Share/Bookmark



2011-07-23
பாதையோரமாய்
பதமாய் வீசிப்போன
அருளில் கணத்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்குள்
ஏதோ கக்கிச் சென்றது.

பக்கத்து அகதி முகாமில்
ஓட்டை விழுந்த
ஓலைப் பள்ளியில்
புதிதாய் இரண்டு பாய்
இரண்டாம் வரியில் விரித்தார்களாம்
முதல் வரி நிறைவதற்கும்
இன்னும் இரண்டு பேர் தேவையாம்

பள்ளிக்குப் பக்கத்தில்
பாத்திமா தாத்தாவின்
பளிங்கு மாடியில்
பர்தாவொன்று காயுதாம்
வந்து போன றமழானில்
இரவுத் தொழுகையில்
பார்த்த ஞாபகமாம்

பிர்தௌஸ் நாணாவின்
பின் வாசல் முற்றத்தில்
ஓரிரு முஸல்லாக்கள்
ஓராண்டின் பின்
முழுகிக் கொண்டிருந்ததாம்.

இப்படியெல்லாம் நடந்ததாய்
அருளில் நிறைந்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்கள்
ஏதோ கதறியழுதது . .. . .

அயல் வீட்டு வாசி
அண்வர் மாமாவும்
கொழும்புக்குப் போய்
குர்ஆன் வாங்கி வந்ததாய்
கடைசி மகன் சொன்னான்

பள்ளி இமாம் வாழும்
பச்சை வீட்டுக்குப் போயிருந்தேன்
நாளையோ மறுநாளோ
அதுவும் சுத்தமாகிவிடும்
.....
அந்த தூரத்தில் கிடந்த
தூசு படிந்த குர்ஆன்

மந்தமான அந்த இருளில்
மஃரிபு வேளை முடித்திருந்தேன்
வெளுத்திருந்த நேற்றைய தாடிகள்
மாம்பழ நிறத்தில் பழுத்திருந்தன.

நேற்று வந்த அதே நேரம்
இன்றைய காற்றும் வந்தது
........
இரண்டு நாட்களில் றமழானாம்
அதுதான் அவ்வளவு கொண்டாட்டமாம்
அழுது கொண்டே சொல்லிச் சென்றது.

திரும்பிப் பார்த்தேன்
பத்து மீட்டர் நீளத்தில்
பட்டியலொன்று கிடந்தது
பேரீத்தம் பழம் என்று
முதல் வரி எழுதப்பட்டிருந்தது

போன றமழானும் இப்படித்தான்
பிறையோடு வளர்ந்த ஈமான்
பிறை தேயத் தேய்ந்தே போனது
பெருநாள் விடியலில்
அழிந்தே போனது

இரண்டு கோப்பைக் கஞ்சியும்
இலவசப் பேரீத்தம் பழமும்
நோன்பு காலக் கொண்டாட்டங்கள்
கடைசிப் பத்தும்
கடைத் தெருக்களின் முகவரிகளாய். . . . .

காலங் காலமாய்க்
கடந்து போகுது றமழான்

நீயும் உனதும் - இன்னும்
ஜாஹிலிய்யா கடந்து வந்த
கல்லாயுத காலத்தில்

ஆள்காட்டி விரலுக்காய்
ஆளைக் கொல்வதும்
கரண்டைக் காலுக்காய்
கழுத்தைத் திருகுவதும்
கடைசி ரகஅத்தில்
கையேந்துவதற்காய்
கண்டந் துண்டமாய் வெட்டுவதும் . . .

றமழான் காலங்களுக்கான
சிறப்புக் கொண்டாட்டங்கள்

அழைப்பு நிலங்களின்
அழகிய முன்மாதிரிகள்

கட்டுண்ட செய்த்தானும்
கண்டு களிக்கும்
கேவலக் கூத்துகள்

இருபத்தி ஏழாம் இரவு மட்டும்
புனிதமாய்ப் போன றமழானில்
மற்றைய நாள் நோன்புகளெல்லாம்
ஆகுமாக்கப்பட்ட ஹறாமானது

அதிசயக் குர்ஆனும்
ஆச்சரித்து அழுதிருக்கலாம்

நானழுத அந்த இரவில்
எனது பேனைச் சாயமும்
உப்புக் கரித்தது

வருகின்ற றழமானை
வரவேற்கும் என் சமூகம்
வழியனுப்ப மறப்பதேனோ?
வழி தவறி நடப்பதேனோ?

பள்ளிக்கு வருவதற்கு
பருவம் வரவேண்டுமாகலாம்
புனித நேரம் வரவேண்டுமா?

அன்னல் நபி தந்த
அமுதங்கள் இவைதானா?
இறைவன் சொன்ன
இறை நேசம் இவ்வளவா?

எரிந்து அணைந்த ஒரு நட்சத்திரம்


Share/Bookmark

2011-07-02

ஒஸாமா என்ற
ஓங்கிய கரங்கள்
ஒழிக்கப்பட்டதொன்றும்
ஓராயிரம் வருட
வரலாற்றுத் திருப்பமல்ல
வெறும் சாம்பல் சரித்திரம்

. . . . . .

எரிந்து அணைந்ததும்
எரி நட்சத்திரமானாலும்
விழுந்து அழிவதுதானே
விண்மீன்களின் விதி

. . . . . .

அண்ணல் நபியும்
அழிந்ததாய்த்தான்
எங்களின் வரலாறு

. . . . . .

எந்த உயிரும் எஞ்சியதாய்
இனி எஞ்சுவதாய்
எங்கள் வேதத்தில் கிடையாது.

. . . . . .

அகிலம் படைத்தவன்
அர்ஷே நடுங்கிய
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் (ரழி)
மையத்துச் செய்தியும்
நாங்கள் கேட்ட
மாறாத வரலாறுதான்

. . . . . .

வான்மறை கொண்டு வந்த
வானவரும் அழிந்து போகும்
அநித்திய உலகில்
நித்தியத்தில் உறங்குவதும்
நிதர்சனமான பொய்

. . . . . .

இரட்டைக் கோபுரம்
இடிந்து வீழ்ந்ததுதான்
சரித்திரத் தவறென்றால் . . . .

. . . . . .

பேராழியைப் பிரித்து
பேரணுக்களைப் போட்டு
பரிசோதனை நடத்தி
படிந்து கிடந்த கடலை
வானேறி வரச் செய்த (சுனாமி)
வக்கிரகத்தை என்னவென்பது.

. . . . . .

உத்தியோகபூர்வ
உயிர் படுகொலைகளும்
உடைகளகற்றி
ஊணுண்ணிகளை ஏவி
உடலைக் கொய்வதும்
உலக நாகரீகமா?

. . . . . .

ஒரு நட்சத்திரம்
எரிந்து விழுவதால்
வானம் பொய்த்திடுமா?
உலகம் இருண்டு போகுமோ?

. . . . . .

உங்கள் ஆயுதங்களில்
நீங்கள் கொண்ட ஈமானிலும்
எங்கள் ஈமானில்
நாங்கள் கொண்ட உறுதி வலிது.