வரவேற்றீர்
வளர்ந்தோம்
வாழ்த்தினீர்
வரவு செலவு பார்க்காமல்
வசந்தம் செய்யச் சொன்னீர்
வசந்தம் செய்தோம்
வரலாறு பதிந்துகொண்டது
வள்ர் மரபு பேணி
வலீமாவுக்கு அழைத்தீர்
வந்தோம்
வயிறாறக் கரி வகை
வைத்தீர்
விடை கேட்கிறீர்
விடியல் தாங்குமா
வேத நூல் சொல்லி
வேற்றுமையில்லையென்றீர்
ஒற்றுமை என்று சொல்லி
ஓதித் தினம் வந்தீர்
நானாவாகவும்
நயத்தகு வாப்பாவாகவும்
நல்லுரை தினம் சொன்னீர்
நன்றிக் கவி பாட
நான் வந்திருக்கிறேன்
நயமான வார்த்தையில்லை
நன்றி சொல்ல மொழியுமில்லை
நானிக் குனிகிறேன்
நான் பாடக் கவியுமில்லை
கனவுகளை அடைய
கடல் கடந்து போகின்றீர்
வட்டமானது வாழ்க்கை
வருமுனையில் சந்திப்போம்
வரும் வரை காத்திருப்போம்.
22082013
தனது மேற்படிப்புக்காக மலேசியா செல்லும் ஆசிரியரின் பிரியாவிடையில் பாடியது