Friday, June 15, 2012

ஏன் இன்னும் என்னைத் தூசிக்கிறாய். .? ?


Share/Bookmark



உன் உதடுகளின்
உச்சரிப்புகளை
இன்னும் அந்தக் காற்று
ஜீரனிக்கவில்லை . . .

உன் பொறாமையும்,
தலைக்கேறிய கர்வமும்
ஒன்றையொன்று புண‌ர்வதில்
பிறக்கும் வார்த்தைகளை . . .

உன்னை ஈன்றெடுத்த
பரம்பரையின்
கல்லறைகளில் எழுதவும்
எனக்கு சம்மதமில்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

சாக்கடை வார்த்தைகளை
சுமந்து வருவதில்
காற்றுக்கு என்ன கஷ்டமோ . . . ? ? ?

இப்பொழுதெல்லாம் காற்று
என் வீட்டு பக்கம்
வருவதே இல்லை . . .

ஏன் இன்னும்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?


நான் என்ன . . . ? ? ?


கடைப்பக்கமாய் போன தந்தையை
கடத்திச் சென்றேனா. . . ? ? ?

உன் மாளிகை முற்றத்தில்
மலம் கழித்தேனா . . . ? ? ?

உன் தொழுகைத் தளங்களில்
நாய்களைப் புணர்ந்தேனா . . . ? ? ?

உன் உத்தம மாதா
உடுத்த கடைசிப் பிடவையை
உன் களவி அறையில்
காட்சிக்கு வைத்தேனா. . . ? ? ?

உன் சிறுசுகளின் காகிதப் பூக்களை
கசக்கி எறிந்தேனா . . . ? ? ?

உன் இரவுகளை
தொல்லைகளால் நிரப்பினேனா. . . ? ? ?

உன் ஆடைகளகற்றி
அவையங்களறுத்தேனா? ? ?

அவப் பெயர் கூறியுன்னை
அகதியென்றழைத்தேனா. . . ? ? ?

உன் அடையாளம் அழித்துன்னை
அநாதையென்றுரைத்தேனா. . . ? ? ?

உன் உடமைகளொன்றேனும்
உனதில்லையென்றேனா. . . ? ? ?

இத்தனையும் செய்த
உன்னை மண்ணித்துவிட்டேனே . . . ? ? ?

இன்னும் ஏன்
என்னைத் தூசிக்கிறாய் . . . ? ? ?

14122011

புளிய மரமே . . . ! ! !


Share/Bookmark



கிளைகள் பரப்பிய கர்வத்தில் 
விகாரமாய்த் தோன்றும் 
புளிய மரமே . . . ! - உன் 
புன்னகைகளை 
எங்கே தொலைத்தாய் . . . ? ? ?

ஈழ மண்ணில் புதையுண்டதா . . . ? ? ?
இஸ்ரேல் களவுகொண்டதா . . . ? ? ?
மேற்கத்தியத்தில் 
மயங்கித் தொலைத்தாயா . . . ? ? ?
மேன்மை நாகரீகத்தை 
நம்பி நாசமாய்ப் போனாயா . . . ? ? ?

ஆல மரமாய் நீயிருந்தால் 
உன் விழுதுகளை 
தூதனுப்பிக் கேட்டிருப்பேன் . . .

புளிய மரமாய் ஆனாயே . . . 

மரமே  . . !
உன் பூக்களுக்குச் சொல் . . . 
விதைகளை நோக்கி 
மீண்டும் செல்லுமாறு . . .

வரலாறு சொல்லும் 
எங்கள் வீரங்களை . . .
அவை அறிந்திருப்பதும் 
அரிதான ஒன்றுதான் . . . 

சென்ற நூற்றாண்டின் 
அவலங்களையேனும் 
அவை சொல்லட்டும்

என் கவிதைகளேனும் 
அவற்றை காகிதத்திலேந்தி 
இன்னுமொரு நூற்றாண்டுக்கு 
எத்தி வைக்கட்டும் . . .