10 55
22 09 2013
கை காலசைத்து
கண் விழிக்கும் பொழுதுகளிலும்தடுமாறும் வேளைகளிலும்
தனிமையின் வெளிகளிலும்
அன்பு மிகைத்த ஓர்
அரவணைப்பிலும்
அடர்த்தியான ஒரு முத்தத்திலும்
அந்திப் பொழுதை
அடைகையிலும்
அது கழிகையிலும்
இருண்ட அறைகளிலும்
இரவின் மடிகளிலும்
இடைக்கிடை கண்விழிக்கும்
இன்பக் கனவிடையும்
எப்படித் தவிர்ந்தாலும்
எப்படியும் நடந்து விடும்
எல்லாத் தவறுகளின் போதும்
கவிதையொன்றைக்
கற்பனை செய்யும் போதும்
மின்சாரம் தடைப்பட்டு
மின் விளக்கணையும் போதும்
மீண்டும் அது வந்து
மின் விசிறி அசையும் போதும்
மழையில் நனைகையில்
மறைந்து ஒழிகையில்
மரத்தடி நிழல்களில்
மாபெரும் வெயில் வெளியில்
எப்படியெல்லாமோ
எழுந்துவிடவே செய்கிறது
அவன் பற்றிய நினைவுகள்
அல்லாஹூ அக்பர்
............
அவனை மறந்தவனாக
.............................
அடுத்த நொடிக்குள்
எனது கால்களை
எப்படி நகர்த்துவேன்
என் நுரையீரலை
எப்படி மீண்டும் நிரப்புவேன்
No comments:
Post a Comment