Saturday, August 17, 2013

வசந்தமே நீ மீண்டும் வா. . . .


Share/Bookmark

என் அருமைக் காதலரே
எகிப்து தேசப் புதல்வரே
ஏகத்துவம் சுமந்த சகோதரரே
ஏற்றம் மிகுந்த சுஹதாக்களே

உங்கள் வீதிகளில்
உஹதைக் காண்கிறேன்
உச்ச வெயிலிலும்
உறுதியை வியக்கிறேன்

கத்ரைக்
கல்பிலே ஏற்றோரே
பத்ரைப்
பார்த்தும் சிரித்தீரே

கபனோடு உங்களைக்
காணும் போதெல்லாம்
கண் குளிர்ச்சிதான் - ஏனோ
கண்ணீரும் வருகிறதே

ஏகன் அவனையே
ஏற்றிப் புகழ்கிறேன்
ஏழைக் கரம்
ஏந்திக் கேட்கிறேன்

வசந்தம் மீண்டும்
வந்தடையக் கேட்கிறேன்......


14 08 2013

No comments:

Post a Comment