Tuesday, May 5, 2015

இலங்கைக் கவிதையொன்று இரங்கல் பாடுகின்றது


Share/Bookmark
இதயம் உள்ளவரெல்லாம்
இது கண்டு அழுகின்றனர்.......

இதோ.....
இலங்கைக் கவிதையொன்று
இரங்கல் பாடுகின்றது.....

இல்லை...........

இந்தக் கவிதை
இன்னும் ஏதோ சொல்கிறது..........

நேபாளம்.....

நேர்ந்ததெல்லாம்
நேற்றைய கதை....

அடுத்த நொடிகள் உன்னை
அடைந்துகொண்டிருக்கின்றன..

அழுது முடித்துவிட்டு
ஆறுதலாக  நீ வர
அகிலம் காத்திருக்காது.......

ஹிரோஷிமாவுக்குப் பின்னர்தான்
ஹீரோவானது ஜப்பான்....

நசிந்து போன நகரங்கள்
நாளடைவில் மாறும்....
நாள்பட்ட துயரங்கள்
நாளையே தீரும்...

அகதிநிலா- 

.12.40am
28042015

No comments:

Post a Comment