Friday, June 15, 2012

புளிய மரமே . . . ! ! !


Share/Bookmark



கிளைகள் பரப்பிய கர்வத்தில் 
விகாரமாய்த் தோன்றும் 
புளிய மரமே . . . ! - உன் 
புன்னகைகளை 
எங்கே தொலைத்தாய் . . . ? ? ?

ஈழ மண்ணில் புதையுண்டதா . . . ? ? ?
இஸ்ரேல் களவுகொண்டதா . . . ? ? ?
மேற்கத்தியத்தில் 
மயங்கித் தொலைத்தாயா . . . ? ? ?
மேன்மை நாகரீகத்தை 
நம்பி நாசமாய்ப் போனாயா . . . ? ? ?

ஆல மரமாய் நீயிருந்தால் 
உன் விழுதுகளை 
தூதனுப்பிக் கேட்டிருப்பேன் . . .

புளிய மரமாய் ஆனாயே . . . 

மரமே  . . !
உன் பூக்களுக்குச் சொல் . . . 
விதைகளை நோக்கி 
மீண்டும் செல்லுமாறு . . .

வரலாறு சொல்லும் 
எங்கள் வீரங்களை . . .
அவை அறிந்திருப்பதும் 
அரிதான ஒன்றுதான் . . . 

சென்ற நூற்றாண்டின் 
அவலங்களையேனும் 
அவை சொல்லட்டும்

என் கவிதைகளேனும் 
அவற்றை காகிதத்திலேந்தி 
இன்னுமொரு நூற்றாண்டுக்கு 
எத்தி வைக்கட்டும் . . . 

No comments:

Post a Comment