பசுக்களின் மீதுள்ள கோபத்தை
பன்றிகளிடம் காட்டுவது
புனிதமென்றால். . . .
புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .
பள்ளி நிலங்களில்
பன்றியருப்பதும்
பள்ளிச்சிறார்களை
பாலுறவுக்கழைப்பதும்தான்
புனிதமென்றால். . . .
புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .
கடவுளின் பெயரால்
களவு செய்வதும்
கடைகளின் மீது
கல்லெறிவதும்
தாடி வைத்தவர்களைத்
தண்டிப்பதும்
தொப்பி போட்டதற்காய்
தொல்லை செய்வதும்
பருவம் வந்து
பர்தா போட்டவளை
பரிகாசம் செய்வதும்
புனிதமாகிப் போகுமென்றால். . . .
புனிதங்களையெல்லாம்
புதைத்துவிட்டுப்
புத்துலகம் செய்வோம்.. .. .
புனிதங்களுக்கெதிராகப்
போர் தொடுப்போம். . . .
22 30
24 10 2013
No comments:
Post a Comment