Wednesday, December 11, 2013

பாதகன் நீ பஞ்சத்தில் சாவ.....


Share/Bookmark

உன் கையாலாகாத
கேவலக் கூத்தை
கவிதைகள் எப்படிப் பதியும் ????

உன் பேடிமை சொல்லியே
என் ஏடுகள் தீருமே....

உன் மூத்திர்ப்போக்கிக்கு
பள்ளிக்குள் சுதந்திரம் கேட்டாய்

என்னூர்ப்
பாவாடைப் பெண்களை
பருவம் வருமுன்னே
பள்ளியறை சேர்த்தாய்

கட்டிய பசுவைக்
கடவுளென்றாய்
கரந்த பாலைக்
கழிவறை சேர்த்தாய்

பாதகன் நீ
பஞ்சத்தில்சாவ....

உன்
பாட்டன், பட்டி
பரம்பரைஅழிய.....

பக்குவமாய்ப் பார்க்கும்
பாவையவள்
பரயனோடு ஓட‌

ஒற்றுமையாய் வாழ
ஒன்னாத நீ
ஒரு நாடு கேட்டாய்

மற்றாரெல்லம்
மருந்துண்டு சாவதா

நானும் எனதுமான என்னைச் சார்ந்த சமூகமொன்றின் சாபம்

14 12 2014

No comments:

Post a Comment