Wednesday, December 11, 2013

அவலமே தொடர்கிறது............


Share/Bookmark
கடி வாளம் இல்லாத‌
காலக் குதிரை
கடுகதியில் ஓடுகிறது....

வருடம் இருமுறை
வந்து பொகும்
பெரு நாள் தினமும்
பெருந்துயரோடே கழிகிறது.....

அடுப்பு எரிய
மண்ணெய் இல்லை
அரிசி வேக
மண் சட்டி இல்லை

மண்ணெய் இன்றியே
மனம் பற்றி எரிய‌
அகதி வாழ்வில்
அவலமே தொடர்கிறது...

11 12 2012

No comments:

Post a Comment