Friday, December 28, 2012

அன்பின் காதலியே!


Share/Bookmark


2012
உனதின் மீதான
காதலின் மிகைப்பில்
காவலன் எழுதுகிறேன்

கருமையாகிப் போன‌
உன் இரவுகளையெண்ணியே
கணதியாகிப்போயின
என் இரவுகள்

உன் மேனி தவழும்
ஆசையில் அழுகிறேன்

சலாகுத்தீன் மீட்ட
சரித்திர பூமியே

உன் மடியில் தவழவும்
உனக்காய் மடியவும்
கோடி சம்மதம்

கடுங் கோடையில்
கடல் வற்றுமெனில்
கடந்து வருவேன்

மண்ணெண்ணய்
மச‌கெண்ணெய்
மலிவாகிப் போகுமெனில்
பறந்து வருவேன்

சத்தியமாய் ........
உன்னை சிறை மீட்பேன்

இல்லை......
உனதின் மடியில்
செத்து மடிவேன்.

No comments:

Post a Comment