18122012
1. அதி தூயவன்அல்லாஹ்வின் பெயரால். . . .
அவன்
அன்பே உடையவன்
அள்ளி
அருளைப் பொழிபவன்
2. அனைத்துப் புகழும்
அல்லாஹ்
அவனையே சாரும்
அவன்
அகிலங்களின்
அதிபதி
3. அவன்
அன்பிற் பெரியவன்
அளவிலா
அருளே நிறைந்தவன்
4. அற்பரென்றாலும்
அற்புதம் செய்தாலும்
அள்ளி வழங்கும்
அந்த நாளின்
அதிகாரி
5. உருவமே அறியாமல்
உன்னையே தொழுகிறோம்
உன்னிடம் மட்டுமே
உதவிகள் கேட்கிறோம்
6. உன்னை அடைந்திட
உகந்த வழி காட்டுவாய்
7. உன் அருளையே
உழைத்த
உன்னதர் வழி உது
உதில்
உயர் பாதை தவறியோர்
உன் கோபத்தை
உண்டு வாழ்வோர்
உலா வருவதில்லை
No comments:
Post a Comment