தசரதனைப்போல்
மனைவிகள் தேவையில்லை
காந்தாரி போல்
குழந்தைகள் தேவையில்லை
கண்ணனைப்போல்
அவதாரங்கள் தேவையில்லை
கர்ணனைப்போல்
புண்ணியங்கள் தேவையில்லை
சுற்றிலும் இயற்கை
சூழ்ந்திருக்க வேண்டும்
அன்னையும் பிதாவும்
அருகிருக்க வேண்டும்
அன்பிற்கொரு மனைவி வேண்டும்
ஆசைக்கொரு குழந்தை வேண்டும்
குடியிருக்க குடிலொன்று வேண்டும்
கோமணமேனும் கட்டியிருக்க வேண்டும்
இன்பத் தமிழ் வந்து காதில் பாய வேண்டும்
இஸ்லாத்தோடு சேர்ந்திருக்க வேண்டும்
இலக்கியத்தில் மூழ்க வேண்டும்
இறையருள் கிடைக்க வேண்டும்.
வாழ்க்கை முடியும்வரை
வண்ணக் கவிதைகளும்
இன்பத் தமிழ் மொழியும்
காதோரம் கேட்க வேண்டும்
கடைசி நேரம் வர
கடமை முடிந்திருக்க வேண்டும்
'கலிமா' வாயில் வர வேண்டும்
கண்ணியமான மரணம் வேண்டும்
2008
No comments:
Post a Comment