மலர்ந்தும் மலராத பாதி மலர்
மலரும் வரை காத்திருப்பான்
விடிந்தும் விடியாத விடியல்
விடியும் வரை விழித்திருப்பான்
கண்டும் காணாத காட்சியை
கற்பனை செய்திடுவான்
புரிந்தும் புரியாத வரிகளை
புனைந்து வரைந்திடுவான்
கனத்தும் கனக்காத கருவின்
கனத்தை அறிந்திடுவான்
வளர்ந்தும் வளராத பிஞ்சு
மனதையும் உணர்ந்திருப்பான்
வளைந்தும் வளையாத மூங்கில்
வளைவினை இரசித்திருப்பான்
பிரிந்தும் பிரியாத பிரியன்
பிணத்தைப் பாடிடுவான்
வலித்தும் வலிக்காத வசை
வரைந்து வைத்திடுவான்
வடிந்தும் வடியாத சொல்லில்
வடிவமே அமைத்திடுவான்
2008
No comments:
Post a Comment