Friday, June 14, 2013

கவிஞன்


Share/Bookmark


மலர்ந்தும் மலராத பாதி மலர்
மலரும் வரை காத்திருப்பான்
விடிந்தும் விடியாத விடியல்
விடியும் வரை விழித்திருப்பான்

கண்டும் காணாத காட்சியை
கற்பனை செய்திடுவான்
புரிந்தும் புரியாத வரிகளை
புனைந்து வரைந்திடுவான்

கனத்தும் கனக்காத கருவின்
கனத்தை அறிந்திடுவான்
வளர்ந்தும் வளராத பிஞ்சு
மனதையும் உணர்ந்திருப்பான்

வளைந்தும் வளையாத மூங்கில்
வளைவினை இரசித்திருப்பான்
பிரிந்தும் பிரியாத பிரியன்
பிணத்தைப் பாடிடுவான்

வலித்தும் வலிக்காத வசை
வரைந்து வைத்திடுவான்
வடிந்தும் வடியாத சொல்லில்
வடிவமே அமைத்திடுவான்

2008

No comments:

Post a Comment