கண்ணாடி பார்த்தேன்
முகம் அந்நியமானது
பாதையில் நடந்தேன்
செருப்பே அறுந்தது
புற்களில் படுத்தேன்
முள்ளாய்த் தைத்தது
பூக்களை மணந்தேன்
தும்மலே வந்தது
மரத்திலே அமர்ந்தேன்
கொப்பு முறிந்தது
தண்ணீர் அருந்தினேன்
உப்புக் கரித்தது
காற்றோடு பேசினேன்
பேச மறுத்தது
காதல் செய்தேன்
கசப்பாய் இருந்தது
காகிதம் கிழித்தேன்
வெள்ளையாய் இருந்தது
பேனையை எடுத்தேன்
தானாய்த் திறந்தது
மூளையைக் கசக்கினேன்
கவிதை சிரித்தது
கவிதையை எழுதினேன்
காகமும் சிரித்தது
மரம் பணிந்து அழைத்தது
மூக்கைத் தேடி பூவே வந்தது
தண்ணீர் தேனாய் இனித்தது
செருப்பு என்னையே சுமந்தது
புற்கள் மெத்தையாய் ஆனது
கண்ணாடி என்னைப் பார்த்தது
என்னோடு காதல் கலந்தது
காற்று காதோரம் இசைத்தது
2009-11-16
No comments:
Post a Comment