கொக்கரக்கோ கூச்சலிட்டு
கொக்கரித்து நின்றபோதும்
கொக்குப் பயலே
கொச்சைச் செருப்பு
கொஞ்சிச் சென்றது
'கொல்' என்பாயோ?
பட்டினி கிடந்த பச்சைக் குழந்தை
பல்லிளிக்குது உனைப் பார்த்து
பச்சோந்திப் பாவியே
பண்டங்கள் வேறின்றியா
பட்டணத்துச் செருப்பு
பழிவாங்கியது உன்னை
அண்டத்தைப் படைத்து
அண்டமுள்ளவற்றைப் படைத்து
அண்டங் காப்பான்
அண்டத்தை ஆட்டி
அரசாட்சிய உன்னை
அகற்றும் நேரமிது
எங்கள் தேசம் (பெப்ரவரி 15-28, 2009) 143 வது இதழில் வெளிவந்த கவிதை
No comments:
Post a Comment